×

கிழக்கு தாம்பரம், சிட்லபாக்கம் பகுதியில் கரிகாலன் தீவிர வாக்கு சேகரிப்பு

தாம்பரம்: தாம்பரம் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் கரிகாலன் நேற்று காலை கிழக்கு தாம்பரம் மற்றும் மாலை சிட்லபாக்கம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, அவர் பேசுகையில், ‘‘தாம்பரம் நகர மன்ற தலைவராக, நான் இருந்தபோது பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை தாம்பரம் பகுதிக்கு செய்துள்ளேன். குறிப்பாக, கிழக்கு தாம்பரத்தில் புதிய சாலைகள் அமைக்கப்பட்டது. இங்கு உள்ள காந்தி பூங்கா நவீன முறையில் புதுப்பிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். பாதாள சாக்கடை திட்ட பணிகள் துவங்கப்பட்டு, பெருமளவு முடிக்கப்பட்டு உள்ளது.

மேலும், பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை தாம்பரம் தொகுதி முழுவதும் மேற்கொள்ளும் வகையில், குக்கர் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச்செய்ய வேண்டும்,’’ இவ்வாறு அவர் பேசினார். இந்த பிரசாரத்தில், கட்சி செய்தி தொடர்பாளர் தாம்பரம் நாராயணன், ஒன்றிய செயலாளர் நந்தகுமார், சிட்லபாக்கம் பேரூர் செயலாளர் முருகன், தேமுதிக பேரூர் செயலாளர் கிரில் மோகன் உட்பட அமுமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags : East Tambaram, Chittagong , Charcoal intensive ballot collection in East Tambaram, Chittagong area
× RELATED சொல்லிட்டாங்க…