×

டாஸ்மாக் கடைகளுக்கு மது எடுத்து செல்ல தடை

சென்னை: செங்கல்பட்டு கலெக்டர் ஜான்லூயிஸ் வெளியிட்ட அறிக்கை. செங்கல்பட்டு மாவட்டத்தில், சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, வாக்குப்பதிவு (ஏப்.6), வாக்கு எண்ணிக்கை (மே 2) ஆகிய நாட்களில் தமிழ்நாடு வாணிப கழகம் (TASMAC) மற்றும் IMFS பீர் மற்றும் ஒயின் உற்பத்தி செய்யும் நிறுவனங்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், மதுபானங்களை மாவட்ட கிடங்கில் இருந்து, டாஸ்மாக் கடைகளுக்கு எடுத்து செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு, ஏப்.4ம் தேதி காலை 10 மணிமுதல் 6ம் தேதி நள்ளிரவு 12 மணி.வரை, வாக்கு எண்ணும் நாளான(மே 2) அன்று முழுவதும் அமலில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. 


Tags : Tasmac , Ban on carrying alcohol to Tasmac stores
× RELATED டாஸ்மாக் கடையை உடைக்க முயன்ற கைதான நான்கு வாலிபர்களுக்கு சிறை