பெங்களூரு: சி.டி. விஷயத்தின் பின்னணியில் உள்ள டி.கே. சிவகுமார் அரசியலுக்கு தகுதியில்லாதவர் என்று முன்னாள் அமைச்சர் ரமேஷ்ஜார்கிஹோளி தெரிவித்தார். பெங்களூருவில் இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சி.டி. விஷயத்தில் என்னை சிக்கவைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவகுமார் பின்னணியில் செயல்பட்டு வந்துள்ளார். இந்த விஷயத்தை பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டார் எஸ்.ஐ.டி. விசாரணையில் தெரிவித்துள்ளனர். அதே போல் என்னிடம் இதற்கான 11 ஆதாரங்கள் உள்ளது. இதனால் டி.கே.சிவகுமார் மீது போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. டி.கே.சிவகுமார் அரசியலுக்கு தகுதியில்லாதவர் இதனால் அவரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும். அதே போல் சி.டி. விஷயத்தின் தொடர்புடைய மகாநாயகன் யார் என்று தற்போது பெண் குடும்பத்தினர் வெளிப்படையாக தெரிவித்துள்ளனர்.
இது போன்ற கீழ்தரமான அரசியல் செய்துள்ள அவர் கட்சியில் நீடிக்ககூடாது. இவ்வாறு அவர் கூறினார். கடந்த 2ம் தேதி டி.கே. சிவகுமாரை சந்தித்த பின்னர் தங்களது மகள் மாயமானதாகவும் சிடி வெளியிட்ட இளம்பெண்ணின் பெற்றோர் கூறியுள்ளனர்.