×

மேற்குவங்கத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவின்போது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு: பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 2 வீரர்கள் காயம்..!

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு தீவிரமாக நடைபெறுகின்றன. மேற்கு வங்க மாநிலத்தில் 294 தொகுதிகளில் 8 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் முதற்கட்டமாக 5 மாவட்டங்களில் உள்ள 30 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. மேலும் முதற்கட்ட தேர்தல் நடைபெறும் 30 தொகுதிகளில் 2016ம் ஆண்டு திரிணாமுல் காங்கிரஸ் 27 தொகுதிகளில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மம்தா பானர்ஜி முதல்வர் வேட்பாளராக அவர் முதலமைச்சராக உள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அவர் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு காலில் படுகாயமடைந்தார். இந்நிலையில் மேற்கு வங்கத்தில் தேர்தலானது 8 கட்டமாக நடைபெறும். அதனடிப்படையில் முதற்கட்டமாக தற்போது தேர்தல் நடைபெறுகிறது.

இந்த நிலையில் பகவான்பூர் தொகுதியில் வாக்குப்பதிவு தொடங்கும் முன் வாக்காளர் சிலர் அச்சுறுத்த பட்டதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் இரண்டு பேர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். மேலும் அந்த  இரண்டு வீரர்கள் படுகாயமடைந்தனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருடன் சிலர் சேர்ந்து அர்கோலில் வாக்காளர்களை அச்சுறுத்தியதாக பாஜகவினர் புகார் கூறுகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

Tags : West , West Bengal, polling, mysterious persons, firing
× RELATED மேற்கு திரிபுரா தொகுதி தேர்தலை ரத்து செய்க: மார்க்சிஸ்ட் கோரிக்கை