×

ஒரே நாளில் 62,291 பேருக்கு பாதிப்பு.. 291 பேர் பலி : 5 மாதங்களுக்கு பிறகு இந்தியாவில் மீண்டும் கொரோனா உக்கிரம்!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.61 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 1.19 கோடியை  தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 62,258 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை  1,19,08,910 ஆக உயர்ந்தது.

* புதிதாக 291 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,61,240 ஆக உயர்ந்தது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 30,386 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,12,95,023 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4,52,647 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* குணமடைந்தோர் விகிதம் 94.85% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.35% ஆக குறைந்துள்ளது.

* சிகிச்சை பெறுவோர் விகிதம் 3.80% ஆக குறைந்துள்ளது.

* இதுவரை இந்தியாவில் 5,81,09,773 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Tags : Corona ,India , India, Corona, Virus, Lockdown
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...