×

பாமக பேச்சை கேட்டு எடப்பாடி நடக்கிறார்: ராமதாஸ் பேச்சு

சென்னை: பாமக சொல்வதை தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டு, அதன்படி நடந்து வருகிறார் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசினார். பெரியபாளையம் அருகே தண்டலம் கிராமத்தில் கும்மிடிபூண்டி பாமக வேட்பாளரை பிரகாசை ஆதரித்து, பாமக நிறுவனர் ராமதாஸ் பிரசாரம் செய்தார். அப்போது, அவர் பேசியதாவது: தமிழகத்தின் முதல் தொகுதி கும்மிடிபூண்டி. இது பாமகவுக்கு கிடைத்துள்ளது. இது வெற்றி தொகுதியாக வேண்டும். உலகத்தில் 5 நாடுகள் மகிழ்ச்சியாக உள்ளது. அதுபோல், தமிழகத்தில் மகிழ்ச்சியாக இருக்க எடப்பாடி முதல்வரானால்தான் முடியும். பாமகவின் பல்வேறு ஆலோசனைகளை கேட்டு எடப்பாடி செயல்பட்டு வருகிறார். இவ்வாறு ராமதாஸ் பேசினார்.



Tags : Edappadi walks listening to Bamaka's speech: Ramadas speech
× RELATED தினமும் பேசவேண்டும் என்று நினைக்கும்...