×

இலங்கை கடற்படையால் கைதான தமிழக மீனவர்கள் 40 பேர் விடுதலை

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம், ஜெகதாபட்டினம், காரைக்கால் பகுதிகளை சேர்ந்த 54 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கடந்த 24ம் தேதி இரவு கைது செய்தனர். இவர்களின் 5 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதற்கு மீனவர்கள் மற்றும் அரசியல் கட்சிகளிடம் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மீனவர்களை விடுவிக்குமாறு இலங்கை அரசிடம் வலியுறுத்தியது. இலங்கை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே, தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்யுமாறு நேற்று காலை உத்தரவிட்டார். இதை தொடர்ந்து இலங்கை நீதிமன்ற உத்தரவுப்படி, பகல் 12 மணியளவில் 40 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

Tags : Sri Lanka Navy , Tamil Nadu fishermen
× RELATED இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம் மீனவர்கள் மீது கொடூர தாக்குதல்