அமமுக காரைக்கால் மாவட்ட செயலாளரான தர்ப்பாரண்யம் அமமுக கட்சி சார்பில் திருநள்ளாறு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் நேற்று அமமுக கட்சியிலிருந்து திடீரென விலகிய தர்ப்பாரண்யம், பாஜவில் இணைந்துள்ளாராம். தாமரை வேட்பாளரை எதிர்த்து போட்டியிட மனமின்றி தாமரையில் இணைந்து கொண்டதாகவும், அவரை வெற்றிபெற செய்வதற்கு உழைக்கப்போவதாகவும் தர்ப்பாரண்யம் தெரிவித்துள்ளார். தேர்தல் செலவிற்கு அமமுக கட்சி பணம் தரவில்லை. அதன் காரணமாகவே கட்சித்தாவலில் ஈடுபட்டதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறதாம்.