×

சிறந்த தொகுதியாக மாற்றுவேன்: மயிலை த.வேலு வாக்கு சேகரிப்பு

சென்னை: மயிலாப்பூர் தொகுதி திமுக வேட்பாளர் மயிலை த.வேலு நேற்று 173வது அ வட்டத்திற்கு உட்பட்ட கிரீன் வேஸ் ரோடு, அன்னை சத்யா நகர், எம்.ஆர்.சி.நகர், சீனிவாசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள், வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்தார். அப்போது, பொதுமக்கள் அவரை உற்சாக வரவேற்று மலர்தூவி, சால்வை அணிவித்து, மாலை அணிவித்து, ஆரத்தி எடுத்து வாழ்த்தினர். அதை தொடர்ந்து பூக்கடைகள், காய்கறி மற்றும் மளிகை கடை வைத்திருப்பவர்களிடம் குறைகளை கேட்டும், திமுக தேர்தல் அறிக்கையில் உள்ள திட்டங்களை தெரிவித்தும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, குடும்பம் குடும்பமாக அவருடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

அப்போது எங்களுடைய வாக்குகள் அனைத்தும் திமுகவிற்கே, திமுக வெற்றி பெறுவது உறுதி. இதுவே எங்கள் வாக்குறுதி என்று மக்கள் உறுதியளித்தனர். பொதுமக்களின் குறைகளை கேட்ட மயிலலை த.வேலு, ‘திமுக ஆட்சி அமைந்தவுடன் உங்களது அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றப்படும். மயிலாப்பூரை சிறந்த தொகுதியாக மாற்றுவேன். எனவே, உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்ய வேண்டும், என்றார்.பிரசாரத்தின் போது, திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உடன் சென்று ஆதரவு திரட்டினர்.



Tags : Mayilai T.Velu , I will make the best block: Mayilai T.Velu Vote Collection
× RELATED ஒதுக்கப்பட்ட வீடுகள் இதுவரை ...