×

குமரியில் விஜய் வசந்த் உள்ளிட்ட திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரியங்கா காந்தி பிரசாரம்

சென்னை: கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்தை ஆதரித்து, தேசிய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வரும் 3ம்தேதி கன்னியாகுமரிக்கு வருகை தருகிறார். அங்கு அங்கு நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் ஆதரவு திரட்டி பேசுகிறார்.

வரும் 28ம்தேதி ராகுல்காந்தி சென்னை, கள்ளக்குறிச்சியில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். அன்று மாலை திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். அதேபோன்று அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் தமிழகம் வருவதாக மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்திருந்தார். அவர் இன்று கன்னியாகுமரி வருகை தருவதாக தகவல் வெளியாகின.
கன்னியாகுமரியில் மெகா ரோடுஷோ பிரச்சார நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரது பிரச்சார சுற்றுப்பயண விபரங்கள் இறுதி செய்யப்படவில்லை. இதனால் அவர் ஏப்ரல் 3ம் தேதி கன்னியாகுமரிக்கு வருகை தருகிறார். அங்கு நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலோடு சேர்த்து தற்போது கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. காங்கிரஸ் வேட்பாளராக வசந்தகுமார் மகன் விஜய் வசந்த் களமிறக்கப்பட்டுள்ளார். இந்த தொகுதியில் பாஜக சார்பாக மீண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். தமிழகத்தில் இருந்து பாஜகவுக்கு ஒரு எம்பியையாவது கொண்டு வர வேண்டும் என்ற முனைப்பில் பாஜக செயல்பட்டு வருகிறது. அதை முறியடிக்கும் வகையில் பிரியங்கா காந்தியின் தேர்தல் பிரச்சாரம் இருக்கும் என்று குமரி மாவட்ட காங்கிரசார் தெரிவித்துள்ளனர். அதனால் பிரியங்கா காந்தியின் பொதுக்கூட்ட பிரச்சாரம் குமரி மாவட்ட திமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பை உறுதிப்படுத்தும் என்றும் நம்பப்படுகிறது.

Tags : Priyanka Gandhi ,DMK ,Vijay Vasant ,Kumari , Priyanka Gandhi
× RELATED தேர்தல் நேரத்தில் கெஜ்ரிவால் கைது...