×

கொரோனா தொற்றால் துப்புரவு ஆய்வாளர், 3 எஸ்ஐ பாம்பு பிடி வீரர் உயிரிழப்பு

சென்னை: அம்பத்தூர் சித்து ஒரகடம் பகுதியை சேர்ந்தவர் ரவி (54), அம்பத்தூர் மண்டல துப்புரவு ஆய்வாளர். கடந்த 13ம் தேதி இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார். * அம்பத்தூர் கள்ளிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஸ்டான்லி பெர்னாண்டஸ் (62). பொதிகை தொலைக்காட்சியில் கேமராமேனாக பணியாற்றி ஓய்வுபெற்றவர். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பாம்பு பிடிக்கும் வீரராக வலம் வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். இவர் சென்னை, புறநகர் பகுதிகளில் வீடு அலுவலகங்களில் புகுந்த பல்வேறு வகையான பாம்புகளை தைரியமாக பிடித்து வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினரிடம் ஒப்படைத்து உள்ளார். இதுவரை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்து பொதுமக்களுக்கு உதவி செய்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.* சென்னை பட்டாளம் காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் இளங்கோவன் (55).  வேப்பேரி காவல் நிலையத்தில் போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளராக  பணிபுரிந்து வந்தார். இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, கடந்த மாதம் 25ம்  தேதி அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு  சிகிச்சை பெற்று வந்த நிலையில் 28ம் தேதி திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு  ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார். தொடர்ந்து அங்கு  சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில்  சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இவருக்கு பாரதி என்ற மனைவி, 2  மகள்கள் மற்றும் மகன் ஆகியோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. * தாம்பரம்  போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஜான் ரூபஸ் (57), கடந்த ஏப்ரல் 28ம் தேதி கொரோனா பரிசோதனை செய்தார். அதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அண்ணாநகரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். * வேப்பேரி போக்குவரத்து சிறப்பு எஸ்ஐ இளங்கோவன் (55), கடந்த ஏப்ரல் 17ம் தேதி கோவேக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்டார். எனினும் அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த ஏப்ரல் 28ம் தேதி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். வேப்பேரி போக்குவரத்து காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் உள்பட 11 போலீசார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது….

The post கொரோனா தொற்றால் துப்புரவு ஆய்வாளர், 3 எஸ்ஐ பாம்பு பிடி வீரர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Ambattur Sidhu Oragadam ,Ambattur ,Dinakaran ,
× RELATED சென்னையில் இருந்து விமான நிலையம் வந்த...