சென்னை: பெண் எஸ்.பி. அளித்த பாலியல் தொல்லை புகாரில், காவல் உயரதிகாரியிடம் தமிழக அரசின் உயர்மட்டக்குழு விசாரணை மேற்கொண்டுள்ளது. சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள காவல்துறை உயரதிகாரியிடம் கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையிலான குழு விசாரணை நடத்தி வருகிறது. பாலியல் தொந்தரவு புகாரை சிபிசிஐடி தனியாக விசாரிக்கும் நிலையில் 6 உயரதிகாரிகள் அடங்கிய தமிழக அரசின் குழுவின் விசாரித்து வருகிறது.