×

மக்கள் தேவையை நிறைவேற்றுவேன்: இ.கருணாநிதி வாக்குறுதி

தாம்பரம்: பல்லாவரம் தொகுதி திமுக வேட்பாளர் இ.கருணாநிதி தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, நேற்று பம்மல் பகுதியில் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். மக்கள் பட்டாசு வெடித்து, மலர் தூவி, ஆரத்தி எடுத்து அவரை வரவேற்றனர். அப்போது பேசிய அவர், ‘‘பம்மல் பகுதியில் சாலை வசதி, குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ஆர்.ஓ.பிளான்ட் உட்பட பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் செய்து உள்ளேன். மக்களின் தேவையை நிறைவேற்றி உள்ளேன். மேலும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் பல்லாவரம் தொகுதிக்கு கிடைத்திட உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும்,’ என்றார்.

அப்போது பொதுமக்கள், ‘கொரோனா ஊரடங்குபோது பொதுமக்களின் தேவையை அறிந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, சொந்த செலவில் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப்பொருட்களை கொடுத்து உதவிய ஒரே நபர் நீங்கள்தான், எனவே எங்கள் ஓட்டு நிச்சயம் உதயசூரியனுக்குதான்,’ என அவரிடம் உறுதியளித்தனர். பிரசாரத்தின்போது தொகுதி பொறுப்பாளர் மீ.அ.வைத்தியலிங்கம், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த டில்லி பாபு, மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்த முகமது நைனார், பம்மல் திமுக நகர செயலாளர் வே.கருணாநிதி உட்பட ஏராளமான திமுக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் உடனிருந்தனர்.



Tags : E. Karunanidhi , People need, I will fulfill, E. Karunanidhi
× RELATED பணிகள் முழுமையாக முடிந்து ராதாநகர்...