×

விஜயநகர் பாலப்பணி முடிக்கப்படும்: அசன் மவுலானா வாக்குறுதி

சென்னை: வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானாவை ஆதரித்து நேற்று தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் பல்வேறு பகுதிகளில் வீதி வீதியாக சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, அசன் மவுலானா பொதுமக்கள் மத்தியில் பேசுகையில், ‘வேளச்சேரி தொகுதி மக்களுக்கு சேவை செய்யவே காங்கிரஸ் கட்சி எனக்கு வாய்ப்பளித்துள்ளது. என்னை வெற்றி பெறச் செய்தால் தொகுதி மக்களின் பிரச்னைகளை தீர்க்க உங்களின் குரலாக சட்டசபையில் ஒலிப்பேன்.  விஜயநகர் பேருந்து நிலையம் அருகில் நீண்ட காலமாக கட்டப்பட்டு வரும் பாலப் பணிகளால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சேலத்தில் 12 கி.மீ., பாலத்ைத முதல்வர் சர்வ சாதாரணமாக கட்டி முடித்தார். ஆனால் இங்கு 2 கி.மீட்டர் பாலத்தை கட்டுவதற்கு இவ்வளவு கஷ்டப்படுகிறார். இத்தனை ஆண்டுகளாகியும் பாலப்பணிகள் முடிவடையவில்லை என்றால் வேளச்சேரி மக்கள் அவருக்கு பிரதானமாக தெரியவில்லை.

ஆட்சி மாற்றம் வந்தால் தான் இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். அந்த மாற்றத்தை மக்கள் கொண்டு வர கை சின்னத்துக்கு வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்ய கேட்டுக் கொள்கிறேன்’ என்றார். வேளச்சேரி கிழக்கு பகுதி திமுக செயலாளர் துரை கபிலன், ராஜூ, விநாயகமூர்த்தி, செல்வம், ரவிகிருஷ்ணன், சுரேஷ், சின்னதம்பி, விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ரவிக்குமார் உட்பட ஏராளமானார் உடன் சென்று ஆதர திரட்டினர்.

Tags : Vijayanagar bridge ,Asan Maulana , Vijayanagar Bridge, to be completed, by Asan Maulana
× RELATED 365 நாட்களும் தண்ணீர் நிற்கும்...