×

அமலாக்கத் துறையில் மெகபூபா ஆஜர்

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநில முதல்வராக பதவி வகித்தபோது சட்ட விரோத பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டதாக மெகபூபா முப்தி மீது அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இது தொடர்பான விசாரணைக்காக டெல்லியில் கடந்த 15ம் தேதி ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கும்படி டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். இதை கடந்த 19ம் தேதி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை்யடுத்து, டெல்லிக்கு பதிலாக ஸ்ரீநகரில் ஆஜராக அனுமதிக்கும்படி அமலாக்கத் துறைக்கு மெகபூபா கடிதம் எழுதினார். இதை அமலாக்கத் துறை ஒப்புக் கொண்டதால், நகரின் ராஜ்பாக்கில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் மெகபூபா நேற்று காலை விசாரணைக்காக ஆஜரானார். அவரிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

Tags : Mehbooba Azhar ,Enforcement Department , Enforcement Department, Mehbooba, Azar
× RELATED இனிப்பு வகைகளை வேண்டுமென்றே...