சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு அளிப்பதை எதிர்த்த மத்திய அரசின் நிலைக்கு திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் முடிவு சமூக நீதிக்கு எதிரானது என்று திமுக வழக்கறிஞர் எம்.பி.வில்சன் வாதாடியுள்ளார். மேலும் மத்திய அரசு நிலை அரசு பள்ளியில் படிக்கும் மாணவர் நலனுக்கு எதிரானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.