உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று சீர்மரபினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டி.என்.டி. சான்றிதழில் உள்ள குளறுபடிகளை சரிசெய்யவும், கணக்கெடுப்பு நடத்தி இடஒதுக்கீடு அறிவிக்கக் கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் உசிலம்பட்டியில் முதல்வர் வருகையை ஒட்டி சீர்மரபினர் சங்க நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.