ராமேஸ்வரம்: தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 40 மீனவர்களை 5 விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. ராமநாதபுரத்தைச் சேர்ந்த 20 மீனவர்கள் 2 படகுகளுடன் மன்னார் கடற்படை முகாமில் வைக்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டையைச் சேர்ந்த 14 மீன்வர்கள் 2 படகுகளுடன் காரைநகர் கடற்படை முகாமில் வைக்கப்பட்டுள்ளனர். காரைக்காலை சேர்ந்த 6 மீனவர்கள் ஒரு படகுகளுடன் திரிகோணமலை கடற்படை முகாமில் வைக்கப்பட்டுள்ளனர்.