×

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் காவலாளி பலி

சாத்தூர்: சாத்தூர் அருகே 2 மாதங்களாக மூடியிருந்த பட்டாசு ஆலையில் ரசாயனப் பொருட்களை ஒதுக்கி வைத்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் காவலாளி பலியானார். விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே  வி.சுந்தரலிங்கபுரத்தில் சிவகாசியை சேர்ந்த ஆனந்த் (30) என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலை கடந்த 2 மாதங்களாக செயல்படாமல் உள்ளது. 7 அறைகள் கொண்ட இந்த ஆலையில் நேற்று ஒரு அறையில் வைக்கப்பட்டிருந்த ரசாயன மூலப்பொருட்களை காவலாளியான தம்மநாயக்கன்பட்டியைச் சேர்ந்த விஜய் (எ) சங்கரலிங்கம் (30) ஒதுக்கி வைத்துக்கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட உராய்வினால் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அறை முழுவதும் சேதமடைந்தது. இதில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி சங்கரலிங்கம் உயிரிழந்தார்.

தகவலறிந்த சாத்தூர் மற்றும் விருதுநகர் தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். அப்பநாயக்கன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெடி விபத்தில் உயிரிழந்த சங்கரலிங்கத்திற்கு, கடந்த ஆண்டு தான் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது. மாதம் 3; விபத்து 6 விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் 6வது முறையாக பட்டாசு ஆலையில் வெடி விபத்து நிகழ்ந்துள்ளது.  இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags : Sattur , Sattur, firecracker factory, blast kills guard
× RELATED தொழில் போட்டியில் தொழிலாளியை வெட்டி கொன்றவருக்கு ஆயுள் சிறை