×

குடிநீர் பிரச்னைக்கு தீர்வு: இ.பரந்தாமன் வாக்குறுதி

சென்னை: எழும்பூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் இ.பரந்தாமன் போட்டியிடுகிறார். இவர் எழும்பூர் தொகுதிக்கு உட்பட்ட புளியந்தோப்பு, வேப்பேரி, சேத்துப்பட்டு, புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று மக்கள் மற்றும் சாலையில் சென்ற பாதசாரிகளிடம் வாக்கு சேகரித்தார். இதேபோல் நேற்று மாலை நரியங்காடு காவலர் குடியிருப்பில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார், அப்போது காவலர்களுக்கு வாரம் ஒரு முறை விடுப்பு, பதவி உயர்வில் மாற்றம் என திமுக தலைவர் காவலர்களுக்கு, தேர்தல் அறிக்கையில் பல நல திட்டங்கள், கூறியிருப்பதை கூறி வாக்கு சேகரித்தார். இதேபோல், “எழும்பூர் தொகுதி மக்களின் முக்கிய  பிரச்னையான குடிநீரில் கழிவுநீர் கலந்து வரும் பிரச்னை திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் உடனடியாக தீர்க்கப்படும்.

திமுகவின் தேர்தல் அறிக்கையில் திமுக தலைவர் ஸ்டாலின், பல்வேறு நல திட்டங்களை அறிவித்துள்ளார். குறிப்பாக நமது சென்னை மக்களுக்கு பல நல்ல திட்டங்களை அறிவித்ததுள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக எந்த நலதிட்டங்களும், வேலை வாய்ப்பு இல்லாமல் அவதியடைந்து வந்த நமது தொகுதிக்கு நல்லது நடக்க மக்கள் திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும். தொகுதிக்கு என்ன வேண்டும் என்பதை நீங்கள் என்ன்னிடம் கேட்காமலே நான் செய்வேன்,” என்று கூறினார். நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், பரந்தாமனை ஆதரித்து எழும்பூர் தொகுதியில் வாக்கு சேகரித்தார்.



Tags : E. Barandaman , ution to the drinking water problem: E. Barandaman's promise
× RELATED பொதுமக்கள் வசதிக்காக சூளை வழியாக...