சென்னை: சென்னையில் இருந்து துபாய்க்கு விமானத்தில் 18.5 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு பணம் கடத்த முயன்ற பெண் பிடிபட்டார். சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்லும் ஃபிளை துபாய் சிறப்பு விமானம் நேற்று புறப்பட தயாரானது. அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளை விமான நிலைய சுங்கத்துறையினர் சோதனை செய்து கொண்டிருந்தனர். காஞ்சிபுரத்தை சேர்ந்த வசந்தா(32) என்ற பெண் டிராலி பேக்குடன் பயணம் செய்ய வந்தார். சுங்கத்துறையினருக்கு அந்த டிராலி பேக் மீது சந்தேகம் ஏற்பட்டது. வசந்தாவை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அவருடைய டிராலி பேக்கில் கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர், குவைத் தினார் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அதன் சர்வதேச மதிப்பு 18.5 லட்சம். இதனையடுத்து, வசந்தாவின் பயணத்தை ரத்து செய்து அவரை கைது செய்தனர்.