மும்பை: இந்திய கிரிக்கெட் பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் ஐயர் இடது தோல்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி அணியின் கேப்டனான ஷ்ரேயாஸ் ஐயர், ஐ.பி.எல். தொடரின் முதல் பாதியிலும் பங்கேற்கமாட்டார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.