×

கொளத்தூர் தொகுதியில் 4வது நாளாக துர்கா ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு

பெரம்பூர்: கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 3வது முறையாக போட்டியிடுகிறார். அவருக்கு இன்று 4வது நாளாக அவரது மனைவி துர்கா ஸ்டாலின் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். 67வது  வார்டுக்கு உட்பட்ட அகரம் சின்னசாமி தெருவில் குடியிருப்பு நலச்சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுடன் துர்கா ஸ்டாலின் கலந்துரையாடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இதைத் தொடர்ந்து குமரன் நகர், 2-வது தெருவில் மகளிர் சுயஉதவி குழு பெண்களுடன் கலந்துரையாடி வாக்கு சேகரித்தார். மேலும், கங்காதேவி நகர் பகுதியில் வடஇந்திய மக்களை சந்தித்து, அவர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.  இதைத் தொடர்ந்து மகாத்மா காந்தி நகர் பகுதியில் மகளிர் சுயஉதவி குழு பெண்களை சந்தித்து துர்கா ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்நிகழ்ச்சிகளில் கொளத்தூர் பகுதி செயலாளர் நாகராஜன், வட்ட செயலாளர்கள் அதிபதி, பாபு,  சவுந்தர், சண்முகம், முத்துவேல் மற்றும் பிரபு உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் உடனிருந்தனர்.


Tags : Durga Stalin ,Kolatur constituency , Durga Stalin's 4th day of polling in Kolathur constituency
× RELATED சென்னை தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி....