கடலூர்: பிரசாரத்தின் போது கொரோனா பரிசோதனை செய்ய பிரேமலதாவை அதிகாரிகள் அழைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. எல்.கே.சுதீஷ், அவரது மனைவிக்கு கொரோனா உறுதியான நிலையில் சுகாதார அதிகாரிகள் நேரில் வந்து அழைப்பு விடுத்துள்ளனர். பிரசாரத்தை திசை திருப்ப முயற்சிப்பதாகவும், பிற்பகலில் சோதனை செய்து கொள்வதாகவும் பிரேமலதா கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.