சென்னை: தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் பொதுச்செயலாளர் கண்ணையாவின் மகன் வீட்டில் ஐ.டி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சென்னை பெரம்பூரில் உள்ள கண்ணையா மகன் பிரகாஷ் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். சாப்ட்வேர் கம்பனி நடத்தி வரும் பிரகாஷ் வீட்டில் நடந்த ரெய்டில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.