தண்டையார்பேட்டை: உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் சதீஷ் சந்திரா (28). இவர், கடந்த சில மாதங்களாக தண்டையார்பேட்டை நேதாஜி நகர் 1வது தெருவில் வீடு வாடகைக்கு எடுத்து நண்பர்கள் 5 பேருடன் தங்கி, அதேப்பகுதியில் உள்ள அட்டை கம்பெனியில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 5 நண்பர்களும் இரவு வேலைக்கு சென்று விட்டனர். அப்போது, சதீஷ் சந்திரா மட்டும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவில் வீட்டுக்கு வந்த மர்ம நபர்கள், கதவை தட்டியுள்ளனர். சதீஷ் சந்திரா, தூக்கத்தில் கதவை திறந்து பார்த்துள்ளார். அப்போது, மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி, அறையில் இருந்த 5 செல்போன், ரூ.15 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து, அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர். புகாரின் பேரில் ஆர்.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.