×

மக்கள் குறைகளுக்கு உடனடி தீர்வு: மயிலை த.வேலு வாக்குறுதி

சென்னை: மயிலாப்பூர் தொகுதி திமுக வேட்பாளர் மயிலை த.வேலு நேற்று சி.வி.ராமன் சாலை, டிடிகே சந்திப்பில் பிரச்சாரத்தை தொடங்கினார். பின்னர், 123 வட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலை, பக்தவச்சலம் தெரு, பாரதியார் தெரு,  சீத்தம்மாள் காலனி, வி.ஓ.சி தெரு, எல்டம்ஸ் தெரு, பெரியார் சிலை, கரி மேடு குடிசை பகுதி, காமராசர் சாலை, எல்டம்ஸ் ரோடு, ஸ்ரீராம் காலனி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், ‘திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள மகளிருக்கு மாதம் ரூ.1000, கொரோனா நிவாரணமாக ரூ.4000, சிலிண்டருக்கு ரூ.100 மானியம், மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள், மீனவர் சமுதாயம்  பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படும், சொந்தமாக ஆட்டோ வாங்க ரூ.10 ஆயிரம் அரசு மானியம் போன்றவற்றை மக்களுக்கு பெற்று தருவேன்,’ என்றார்.

தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள காய்கறி மற்றும் மளிகை கடை வைத்திருப்பவர்களிடம் குறைகளை கேட்டு, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, மக்களின் குறைகளை உடனுக்குடன் தீர்த்து வைப்பேன். உங்களுடைய அனைத்து  கோரிக்கைகளையும் நிறைவேற்றி கொடுப்பேன் என்று வாக்குறுதி அளித்தார். இதையடுத்து அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் திமுக தான் நிச்சயம் வெற்றி பெறும் என்று உறுதியளித்தனர்.  தென் சென்னை நாடளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.



Tags : Mayila T. Velu , mmediate solution to people's grievances: Mayila T. Velu's promise
× RELATED கோரிக்கைகளை உடனே நிறைவேற்றுவேன்: மயிலை த.வேலு வாக்குறுதி