×

நரேலா பகுதியில் பெண், மைத்துனர் ரயிலில் பாய்ந்து தற்கொலை

புதுடெல்லி; நரேலா பகுதியில் பெண்ணும், அவரது மைத்துனரும் தண்டவாளத்தில் பாய்ந்து பலியானார்கள். வடக்குடெல்லி பனாமா உதன்நரேலா பகுதியை சேர்ந்தவர் பீனா(45). இவரது கணவர் மாநகராட்சியில் வேலை பார்த்து வந்தார். கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். பீனா அங்குள்ள தனியார் ஆய்வகத்தில் பணிப்பெண் வேலை செய்து வந்தார். இவரது கணவரின் தம்பி கிருஷ்ணன்(35). ரோகினியில் உள்ள டிபிடிடிஎல்லில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர்.

நேற்று காலை 9 மணி அளவில் சோனிபட் நோக்கி செல்லும் ரயில்வே தண்டவாளத்தில் பிணமாக கிடந்தனர். அவர்கள் அந்த வழியாக செல்லும் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து இருப்பது தெரியவந்தது. அவர்களது தற்கொலைக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. இதுபற்றி அறிந்த போலீசார் சம்பவ இடத்தில் கிடந்த செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தார்கள்.



Tags : Narela , Narela area, woman, nephew on train, suicide
× RELATED டெல்லி உள்ள காலணி தொழிற்சாலையில் தீ விபத்து: 2 பேர் உயிரிழப்பு