×

உஷார் மக்களே!: ஆதாருடன் பான் கார்டை இணைக்‍க மார்ச் 31 வரை கெடு...இணைக்காவிட்டால் ரூ.10,000 அபராதம்..!!

டெல்லி: பான் கார்டை வரும் 31ம் தேதிக்குள் ஆதார் எண்ணுடன் இணைக்‍காவிட்டால் அடுத்த மாதம் 1ம் தேதி முதல் பான்கார்டு செயலிழப்பு செய்யப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆதார் அடையாள அட்டை என்பது இந்திய குடிமக்களின் இன்றியமையாத ஆவணங்களில் ஒன்றாக உள்ளது. ஆதலால் ஆதார் அடையாள அட்டையின் எண்ணை முக்கிய ஆவணங்களுடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. மேலும், ஆதாரை இணைக்காதவர்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் சலுகைகளை பெறுவது கடினம் எனவும், அபாரதங்கள் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆதாருடன் பான் கார்டை இணைக்‍க வரும் 31ம் தேதி வரை மத்திய அரசு கெடு விதித்துள்ளது.

வருமான வரி நிரந்தர கணக்கு எண் எனப்படும் பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான இறுதிக்கெடு கடந்த ஆண்டு ஜூன் 30 ஆக நிர்ணயிக்கப்பட்டுயிருந்தது. தொடர்ந்து, கொரோனா பரவல் காரணமாக இதற்கான காலவரம்பு நடப்பாண்டு வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த காலவரம்பை மேலும் நீட்டிக்க முடியாது என தெரிவித்துள்ள மத்திய அரசு, வரும் 31ம் தேதிக்குள் அனைவரும் பான் கார்டுகளை, ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

அவ்வாறு இணைக்‍காவிட்டால் சம்பந்தப்பட்டவர்களின் பான் கார்டு, அடுத்த மாதம் 1ம் தேதி முதல் செயலிழப்பு செய்யப்படும் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது. அத்துடன், பான் கார்டை ஆதாருடன் இணைக்காதவர்களிடம், வருமான வரி சட்டத்தின் கீழ் ரூ. 10,000 அபராதம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகளில் 50,000 ரூபாய்க்கு மேல் பண பரிவர்த்தனை மேற்கொள்ள பான் கார்டு அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Ushar ,Aadhar , Aadhar, Ban Card, March 31, Rs 10,000 fine
× RELATED ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம்...