கடலூர்: கடலூர் பண்ருட்டியில் ராணுவ வீரர் வீட்டில் 53 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ராணுவ வீரர் பாலசுப்பிரமணியத்தின் மனைவி கோயிலுக்குச் சென்றிருந்த நேரத்தில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். ராணுவ வீரரின் மனைவி பிரியா இல்லாத நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நுழைந்தவர்கள் பற்றி போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.