க.பரமத்தி : க.பரமத்தி அருகே பவித்திரம் பாலமலை பெருமாள் கோவில் முன்பு ஏற்பட்டுள்ள பள்ளத்தால் விபத்து ஏற்படும் அபாய நிலை உள்ளதால் வாகனஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.க.பரமத்தி ஒன்றிய் பவித்திரம் பாலமலையில் முருகன் கோயில், மருதகாளியம்மன், பெருமாள் கோயில் ஆகிய பிரபல கோயில்கள் அமைந்துள்ளது. பவித்திரமேடு பகுதியில் இருந்து புன்னம்சத்திரம் செல்லும் தார்சாலையில் பாலமலை பெருமாள் கோயில் முன்பு செல்லும் குடிநீர் குழாய் உடைந்து சின்ன குழியாக ஏற்பட்டது .ஊராட்சி நிர்வாகம் இதனை கண்டு கொள்ளாத நிலையில் தற்போது பெரிய குழியாக மாறி உள்ளது.
இதனால் இரு சக்கர மற்றும் 4 சக்கர வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருவது வாடிக்கையாகி விட்டது.இதன் வழியாக பள்ளி மாணவ, மாணவிகள் மட்டுமல்லாது. இப்பகுதிக்கு தினமும் ஏராளமான இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக இரவு நேரங்களில் விவசாயிகள், விவசாய விளை பொருட்களை இந்த வழியாகத்தான் உள்ளூர் வெளியூர் சந்தைகளுக்கு டூவீலரில் வைத்து கொண்டு விவசாயிகள் சென்று ஊருக்கு திரும்புகின்றனர்.
இவ்வாறு மக்கள் ஏராளமானோர் பொதுமக்கள் பயன்படுத்தும் இந்த சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தால் இந்த வழியாக வாகனங்களில் செல்வோர் அடிக்கடி விபத்து ஏற்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.