விராலிமலை: விராலிமலை அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் அமைச்சர் விஜயபாஸ்கரின் டைரி சிக்கியது. பணம், சேலைகள், மளிகை பொருட்கள் விநியோகம் தொடர்பான தகவல் டைரியில் எடுத்தப்பட்டிருந்ததால் பரபரப்பு நிலவி வருகிறது. விராலிமலையில் அதிமுக கரைச்சேலைகள் மற்றும் மளிகை பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.