×

அமெரிக்காவில் மீண்டும் மர்ம நபர் துப்பாக்கி சூடு.. சூப்பர் மார்க்கெட்டில் தாக்குதல்.. 10 பேர் பலி!

வாஷிங்டன் : அமெரிக்காவில் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் மர்ம நபர் கண்மூடித்தனமாக நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் நாளுக்கு நாள் மோசமாகி வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் அமெரிக்காவின் அட்லாண்டாவில் நடந்த துப்பாக்கி சூட்டில் அமெரிக்காவில் 8 பேர் கொல்லப்பட்ட நிலையில் மீண்டும் அதேபோன்ற சம்பவம் அங்கு நடந்துள்ளது.

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் போல்டர் பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் நேற்று மாலை துப்பாக்கி ஏந்திய இளைஞர் ஒருவர் புகுந்து அங்குள்ள அனைவரையும் சிறைப்பிடித்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த நிகழ்விடத்திற்குச் சென்ற காவல்துறையினர் அந்த மர்ம நபருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது திடீரென ஆத்திரம் அடைந்த இளைஞர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டான்.

இளைஞரின் அந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு காவல் அதிகாரி உள்ளிட்ட 10 பேர் சூப்பர் மார்க்கெட்டிலேயே உயிரிழந்துவிட்டனர். இதையடுத்து அதிரடியாக சூப்பர் மார்கெட்டுக்குள் நுழைந்த காவல் துறையினர் துப்பாக்கி முனையில் இளைஞரை மடக்கி பிடித்து சென்றனர். படுகாயம் அடைந்த 4 பேரை மீட்டு கொலராடோ காவலர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். துப்பாக்கிசூடு நடத்தியதற்கான காரணம் குறித்து பிடிபட்ட இளைஞரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Tags : US , USA, shoot, supermarket
× RELATED அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு ரூ7.50 லட்சம் அபராதம்