×

கும்பகோணம் தனியார் கல்லூரியில் 5 மாணவர்கள், 3 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

தஞ்சை: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தனியார் கல்லூரியில் 5 மாணவர்கள், 3 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே தஞ்சை மாவட்டத்தில் 3 கல்லூரிகளை சேர்ந்த 13 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

தஞ்சை மாவட்டத்தில் ஏற்கனவே 11 பள்ளிகளை சேர்ந்த 180 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை, அம்மாபேட்டை கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரவி வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் மாணவர்கள் மத்தியில் பரவும் கொரோனா வைரஸ் தொற்றால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.


Tags : Kumbagonam Private College , 5 students and 3 teachers at Kumbakonam Private College confirmed corona infection
× RELATED மீண்டும் வாக்குச் சீட்டு முறை...