நாகை: கோடியக்கரை அருகே நடுக்கடலில் நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தினர். அதிவேக படகுகளில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 15 பேர் நாகை மீனவர்களை கத்தி, அரிவாளால் தாக்கியுள்ளனர். தாக்குதல் நடத்தி மீனவர்களிடம் ரூ.3 லட்சம் மதிப்புள்ள வலை, வாக்கிடாக்கின் மீன்களை பறித்துச் சென்றனர்.