×

3 மாதத்தில் பட்டா வழங்கப்படும்: கே.பி.சங்கர் உறுதி

திருவொற்றியூர்: திருவொற்றியூர் தொகுதி திமுக வேட்பாளர் கே.பி.சங்கர் நேற்று மணலி மண்டலம் 18வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர். சிபிசிஎல் நகரில் கே.பி.சங்கர் பிரசாரம் செய்தபோது, அங்கிருந்த பெண்கள், பல ஆண்டுகளாக இங்கு வசித்து வருகிறோம். எங்கள் நிலங்களுக்கு பட்டா இல்லை. பட்டா வாங்கி தருகிறோம் என்று அதிமுகவினர் பல ஆண்டுகளாக ஏமாற்றி வருகின்றனர். எனவே திமுக ஆட்சி அமைந்ததும் எங்கள் பகுதியில் உள்ள அனைவருக்கும் பட்டா வழங்க வேண்டும். இங்கு ஏராளமான இளைஞர்கள் வேலை இல்லாமல் அவதிப்படுகின்றனர். அவர்களுக்கு இந்த பகுதியில் உள்ள நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்றுத் தர வேண்டும், என்றனர்.

அதற்கு பதிலளித்த கே.பி.சங்கர், ‘தமிழகத்தில் விரைவில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நிச்சயம் திமுக ஆட்சி அமைய போகிறது. நான் வெற்றி பெற்றதும் மூன்றே மாதங்களில் சிபிசிஎல் நகர் பகுதி மக்களுக்கு பட்டா வழங்கவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவும் நடவடிக்கை மேற்கொள்வேன்,’ என்றார். அப்போது பொதுமக்கள் கைதட்டி தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்து, எங்கள் வாக்கு உங்களுக்குத்தான் என உறுதியளித்தனர்.



Tags : Patta ,KP Shankar , In 3 months, Patta, KP Shankar confirmed
× RELATED அடையாளம் தெரியாத வாகனம் மோதி பைக்கில் சென்ற கல்லூரி ஊழியர் பலி