×

நிர்வாக திறமையற்றவர் எடப்பாடி: மாதவரம் எஸ்.சுதர்சனம் பேச்சு

திருவொற்றியூர்: மாதவரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம், நேற்று மாதவரம்  மண்டலம் 26, 32, 33வது வார்டுகளுக்கு உட்பட்ட தணிகாசலம் நகர், பொன்னியம்மன்மேடு, லட்சுமிபுரம், ரெட்டேரி  போன்ற பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பொதுமக்கள் மலர் தூவி அவரை வரவேற்று, நெற்றியில் திலகமிட்டு வெற்றிபெற வாழ்த்தினர். அப்போது மாதவரம் சுதர்சனம் பேசுகையில், ‘போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், ஏழை எளிய தொழிலாளர்கள், அலுவலர்கள், சிரமமில்லாமல் வாகனங்களில் பயணிக்கவும் சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் ஏராளமான மேம்பாலங்கள் திமுக ஆட்சியில் கட்டப்பட்டது.

இவ்வாறு கட்டப்பட்ட, தொடங்கப்பட்ட பாலங்களுக்கு அதிமுக ஆட்சியாளர்கள் திறப்பு விழாகொண்டாடினார்களே தவிர குறிப்பிடும்படியான மேம்பாலம் எதுவும் கட்டவில்லை. மக்களுக்கு அவசியமில்லாத பணிகளுக்கு டெண்டர் விட்டு அதில் வரும் கமிஷனுக்காகவே அதிமுக அமைச்சர்கள் பதவியை பயன்படுத்தினார்கள். எடப்பாடியின் நிர்வாக திறமையின்மையை மக்கள் தெளிவாக புரிந்து கொண்டார்கள். அதனால் தமிழகம் முழுவதும் திமுக கூட்டணிக்கு தான் மக்கள் ஓட்டு போடுவார்கள். விரைவில் மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆவார். மாதவரம் தொகுதி மட்டுமல்ல தமிழகத்திலுள்ள அனைத்து மக்களுக்கும் நல்ல திட்டங்களை செயல்படுத்தி வளமான தமிழகத்தை உருவாக்குவார்கள்,’ என்றார்.

Tags : Madhavaram ,S. Sudarsanam , Management incompetent, Edappadi, S. Sudarsanam
× RELATED மாதவரம் மண்டலத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றை சீரமைக்க பொது மக்கள் வேண்டுகோள்