×

களத்தில் மக்களோடு இருப்பவன் நான்: மயிலை த.வேலு பிரசாரம்

சென்னை: மயிலாப்பூர் தொகுதி திமுக வேட்பாளர் மயிலை த.வேலு நேற்று காலை 7 மணி முதல் இரவு வரை  பவானிகுப்பம், நம்பிக்கை நகர், ராஜிவ்காந்தி நகர், முல்லிமா நகர், கனகராய மலையப்பன் முதலி தெரு, பெரியபள்ளி தெரு, பெரியகார கோட்டை தெருக்கள், சின்னகார கோட்டை, மஞ்சடைஞ்சா முதலி தெரு, மாரிச்செட்டி தெரு, ஆண்டி மான்யம் தோட்டம், திருவள்ளுவர் படிப்பகம், வன்னியம்பதி தெரு  உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களான மகளிருக்கு மாதம் ரூ.1000, கொரோனா நிவாரணமாக ரேஷன் கார்டுக்கு ரூ.4000, சிலிண்டருக்கு ரூ.100 மானியம், மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள், மீனவர் சமுதாயம் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படும், சொந்தமாக ஆட்டோ வாங்க ரூ.10 ஆயிரம் அரசு மானியம் உள்ளிட்டவற்றை எடுத்து கூறி வாக்கு சேகரித்தார்.

தொடர்ந்து மக்களிடம் குறைகளை கேட்டறிந்த அவர், ‘மக்களின் குறைகளை உடனுக்குடன் தீர்த்து வைப்பேன். நான் வீட்டில் உட்கார்ந்து வேலை செய்பவன் அல்ல. களத்தில் மக்களோடு மக்களாக இருப்பவன். உங்களுடைய அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி கொடுப்பேன்,’ என்றார். இதையடுத்து அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் நாங்கள் உங்களுக்கு தான் வாக்களிப்போம். திமுக தான் நிச்சயம் வெற்றி பெறும் என்று உறுதியளித்தனர்.



Tags : Mayilai T.Velu , Domain, present, peacock t
× RELATED ஒதுக்கப்பட்ட வீடுகள் இதுவரை ...