×

முன்னாள் வக்பு வாரிய தலைவர் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு: திமுக கூட்டணிக்கு ஆதரவு

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை முன்னாள் வக்பு வாரிய தலைவர் நேரில் சந்தித்து சட்டசபை தேர்தலுக்கு ஆதரவு தெரிவித்தார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் வக்பு வாரிய தலைவர் ஹைதர் அலி மற்றும் தமுமுக நிர்வாகிகள் சந்தித்து திமுக கூட்டணி, சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வாழ்த்துகளையும் ஆதரவையும் தெரிவித்தனர். மேலும் கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் மற்றும் 39 இஸ்லாமிய ஆயுள் தண்டனை கைதிகளை எவ்வித பாகுபாடும் காட்டாமல் கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும், ஏராளமான உருது ஆசிரியர்களை உருவாக்கிய சென்னை தாஹிர்சாகிப் தெருவில் செயல்பட்டு வந்த உருது ஆசிரியர் பள்ளியை மீண்டும் திறக்க வேண்டும், தமிழ்நாடு வக்பு வாரிய சொத்துகள் பல்லாண்டுகளாக மீளாய்வு செய்யாமல் தொடர்ந்து வருகிறது, மேலும், வக்பு வாரிய நிர்வாகம் சமீபமாக ஊழல் மயமாகி வருகிறது. இதனை தடுக்கும் விதமாகவும், வக்பு வாரிய கண்காணிப்பில் உள்ள சொத்துகளை முழுமையாக கள ஆய்வு செய்திடவும் வக்பு வாரிய மறுசீரமைப்பு குழு ஒன்றை ஏற்ப்படுத்தி குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தமிழக அரசுக்கு பரிந்துரைகள் பெற்று அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.

Tags : Waqf ,Board Chairman ,MK Stalin ,DMK , DMK
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...