டெல்லி: டெல்லி கவர்னருக்கு அதிக அதிகாரங்களை வழங்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றபட்டது. காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் கடுமையான எதிர்ப்பின் மத்தியில் இந்த மசோதா ஏற்கனவே மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவின் படி, டெல்லியில் அரசாங்கம் என்றால் அது லெப்டினன்ட் கவர்னர் தான்.எந்தவொரு நடவடிக்கையும் நிறைவேற்றும் முன்னர் லெப்டினன்ட் கவர்னர் கருத்தையும் டெல்லி அரசு கேட்கவேண்டும் வேண்டும் என்பதை இந்த மசோதா கட்டாயமாக்குகிறது.