×

ம.நீ.ம வேட்பாளர்கள் அனைவரும் அரசியலை தொழிலாக கருதாமல் மக்களுக்கு சேவை செய்யும் கடமையாக கொண்டவர்கள்!: கமல் பரப்புரை

தஞ்சை: ம.நீ.ம வேட்பாளர்கள் அனைவரும் அரசியலை தொழிலாக கருதுபவர்கள் அல்ல; மக்களுக்கு சேவை செய்யும் களமாக, கடமையாக கொண்டவர்கள் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். பட்டுக்கோட்டையில் மக்கள் நீதி மய்ய கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பரப்புரை ஆற்றினார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் டாக்டர் சதாசிவம் மற்றும் பேராவூரணி தொகுதியில் போட்டியிடும் கூட்டணி கட்சியான ஐ.ஜே.கே. வேட்பாளரை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பரப்புரையாற்றினார்.

பட்டுக்கோட்டை மணிக்கூண்டு பகுதியில் திறந்த வேனில் நின்றவாறு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக நிறுத்தப்பட்டிருக்கும் வேட்பாளர்கள் அனைவரும்  அரசியலை தொழிலாக கருதத்தவர்கள் என்றும் மக்களுக்கு சேவை செய்யும் கடமையாக கொண்டவர்கள் என்றும் கூறினார்.

பட்டுக்கோட்டையில் சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்படாததால் போக்குவரத்து நெரிசல் உள்ளதாகவும் பேருந்து நிலைய விரிவாக்க பணிகளும் மேற்கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். முன்னதாக சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானம் மூலம் வந்த கமல்ஹாசன், திருச்சியில் இருந்து தனி ஹெலிகாப்ட்டர் மூலம் பட்டுக்கோட்டைக்கு வந்தடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : BJP ,Kamal Campaign , MNM Candidates, Politics, Career, Service, Kamal
× RELATED சேலம் பாஜ நிர்வாகி மீது மாஜி பெண்...