×

உலக பணக்காரர்கள் வரிசையில் தமிழக அமைச்சர்களுக்கு இடம்.: 2 மாதங்களில் விராலிமலை ரகசியம் வெளியே வரும் என டிடிவி தினகரன் பேச்சு

புதுக்கோட்டை: மக்கள் பணத்தை கொள்ளையடித்து தமிழக அமைச்சர்கள் அனைவரும் உலக பணக்காரர்கள் வரிசையில் இடம் பிடித்து இருப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் கந்தரவக்கோட்டையில் பரப்புரை செய்த அவர், கொரோனாவில் இருந்து கொள்ளையடித்ததை கண்டு உலக நாடுகள் மிரண்டு விட்டதாக அவர் கூறினார்.

கொள்ளையடிக்கப்பட்ட மக்கள் பணம் அனைத்தும் விராலிமலையில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் விஜயபாஸ்கரிடம் அம்பானி மற்றும் அதானி எல்லை பிச்சை எடுக்க வேண்டும் என டிடிவி தினகரன் விமர்ச்சித்துள்ளார். இன்னும் 2 மாதங்களில் விராலிமலை ரகசியம் வெளியே வரும் என்றார்.

ரேஷனில் பொருட்கள் வாங்க கூட லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை இருப்பதாக அவர் குற்றம் சாட்டினார். முதியோர் ஒய்வு ஊதிய திட்டத்தையே ஒழுங்காக கொடுக்காத எடப்பாடி பழனிசாமி, இல்லத்தரசிகளுக்கான உரிமை தொகையை எவ்வாறு தருவார் என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பினர்.


Tags : DTV ,Dinagaran ,Viralimaya , Tamil Nadu ministers ranked among world's richest: DTV Dinakaran talks about Viralimalai secret coming out in 2 months
× RELATED கோடை வெப்பம்: குடிநீர், நீர்மோர்...