மதுரை: அரசியல் கட்சி பிரச்சார கூட்டங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் கொரோனா விதிகள் பின்பற்றப்படுவதில்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. சமீப காலமாக தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் பாகுபாடின்றி முறையாக கொரோனா வழிகாட்டு முறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுரை வழங்கியுள்ளது.