×

திருப்பூரில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.4 லட்சம் பறிமுதல்

திருப்பூர்: திருப்பூரில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.4 லட்சத்தை நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்துள்ளனர். திருமுருகன் பூண்டியில் நடத்தப்பட்ட வாகன சோதனையில் காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.4 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காரிலிருந்து ஹரீஷ், ஹபீப் ஆகியோரை விசாரித்ததில் ஏலக்காய் விற்பனை செய்ததில் கிடைத்த வருமானம் என்பது தெரியவந்தது. உரிய ஆவணமில்லாததால் பறிமுதல் செய்யப்பட்ட பணம் திருப்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Tags : Thirupora , Seizure of Rs 4 lakh taken without proper documents in Tirupur
× RELATED திருப்பூருக்கு வரும் வடமாநில...