×

காதலிக்கும்படி டார்ச்சரால் மனமுடைந்து கல்லூரி மாணவி தற்கொலை வாலிபர் கைது

காரிமங்கலம்: தர்மபுரி அருகே காதலிக்கும்படி வாலிபர் கொடுத்த டார்ச்சர் காரணமாக, கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த மல்லிக்குட்டை ஊராட்சி ராமியம்பட்டியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி கிருஷ்ணன். இவரது மனைவி தமிழ்ச்செல்வி. இவர்களது மகள் லிசாலினி(19), தர்மபுரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பார்ம் 2ம் ஆண்டு படித்து வந்தார். இவரை ஊர் கவுண்டர்கொட்டாயை சேர்ந்த நாராயணன் மகன் தவமணி(26) என்பவர், கடந்த 2 ஆண்டுக்கு மேலாக ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். மேலும், லிசாலினி கல்லூரிக்குச் சென்று வரும் போது, காதலிக்கும்படி கூறி டார்ச்சர் செய்து வந்துள்ளார். அவர் பலமுறை எச்சரித்தும் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம், நண்பர்கள் 6 பேருடன் லிசானியின் வீட்டிற்கு சென்ற தவமணி, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு, தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த லிசாலினி நேற்று காலை வீட்டில் தூக்கில் தொங்கியுள்ளார். குடும்பத்தினர் அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். புகாரின்படி காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து தவமணியை கைது செய்தனர். தலைமறைவான அவரது நண்பர்கள் 6 பேரை தேடி வருகின்றனர். 


Tags : Torcher , Torch to fall in love, college student commits suicide, Valipar arrested
× RELATED காதலிக்க வலியுறுத்தி லவ் டார்ச்சர்;...