பவானி: அம்மாபேட்டை சொக்கநாதர் கோயில் நந்தவனத்தை ஆக்கிரமித்து சாலை போடப்பட்டதை கண்டித்து பிரசாரத்துக்கு வந்த அமைச்சர் கே.சி.கருப்பணனை பக்தர்கள் வழிமறித்து சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால் அவர் பிரசாரம் செய்ய முடியாமல் அங்கிருந்து நழுவிச் சென்றார். ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த அம்மாபேட்டை காவிரி கரையோரத்தில் மீனாட்சி உடனமர் சொக்கநாதர் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இக்கோயிலுக்கு வலதுபுறத்தில் நந்தவனம் இருந்தது.
இந்த நந்தவனத்தை ஆக்கிரமித்து 30 அடி நீளம், 60 அகலத்தில் தார்ச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடந்த ஜனவரி 14ம் தேதிக்குள் ஆக்கிரமிப்பு சாலையை அகற்றி நந்தவனமாக ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால், அம்மாபேட்டை பேரூராட்சி நிர்வாகம் முறையாக இப்பணியை மேற்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.
Tags : Temple Nandavana ,Road Minister , Temple Nandavana, Minister Karuppanana, returned unable to campaign