×

கோரிக்கைகளை உடனே நிறைவேற்றுவேன்: மயிலை த.வேலு வாக்குறுதி

சென்னை: மயிலாப்பூர் தொகுதி திமுக வேட்பாளர் மயிலை த.வேலு நேற்று காலை 122 ‘அ’ வட்டத்தில் உள்ள ராதாகிருஷ்ணன்புரம், பாண்டியன் தெரு, சேரன் தெரு, சோழன் தெரு, பல்லவன் தெரு, காந்தி தெரு, அண்ணா தெரு, போக்சாலை, போட்கிளப் ரோடு, ஏபிஎம் அவென்யூ, டார்பாலிஸ் ரோடு ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து தீவிரமாக வாக்கு சேகரித்தார். தொடர்ந்து மாலையில் பைகிராப்ட்ஸ் நகர், கணேசபுரம் 1,2,3,4வது தெருக்கள், ரத்னா நகர், டி.டி.கே.சாலை 1,2வது குறுக்கு தெரு, சோமியர்ஸ் சந்து, கணபதி காலனி, செனட்டாப் 2 வது சந்து, ராம் நகர் (வடக்கு மற்றும் தெற்கு), காமாட்சி நகர் ஆகிய பகுதிகளுக்கு சென்று திமுக வாக்குறுதிகளை கூறி வாக்கு சேகரித்தார்.

அப்போது, பொதுமக்கள் மலர்தூவி, பொன்னாடை போர்த்தி, ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்றனர். தொடர்ந்து மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் உங்களில் ஒருவன் நான், நீங்கள் எந்த நேரமும் என்னை சந்திக்கலாம். உங்கள் பகுதிகளில் என்ன குறைகள் இருந்தாலும் அதை உடனடியாக சரி செய்து கொடுப்பேன். உங்களுடைய அனைத்து கோரிக்கைகளும் உடனே நிறைவேற்றி தருவேன் என்று வாக்குறுதி அளித்தார். அப்போது, மக்கள் மகிழ்ச்சியுடன் நீங்கள் தான் வெற்றி பெறுவீர்கள், எங்களுடைய வாக்குகள் அனைத்தும் உங்களுக்கு தான் என்று உறுதியளித்தனர்.

Tags : Mayila T. Velu , Request, Execute, Peacock, T.Velu Promise
× RELATED மக்கள் குறைகளுக்கு உடனடி தீர்வு: மயிலை த.வேலு வாக்குறுதி