×

திருத்துறைப்பூண்டி சிங்களாந்தி கிழக்கு கடற்கரை சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகள்

திருத்துறைப்பூண்டி : திருத்துறைப்பூண்டி சிங்களாந்தி பகுதி கிழக்கு கடற்கரை சாலை, ரயில்வே பாலம் அருகில் இரு புறமும் அதிக அளவில் குப்பை கொட்டப்பட்டு கிடப்பதால் சுகாதார சீர்கேட்டுடன் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதே போன்று மரித்தியம்மன் கல்லறை கோயில் அருகிலும் சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இந்த சாலை வழியாக தினந்தோறும் ஆயிரக்காணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்நிலையில் சாலையோரத்தில் கொட்டப்பட்டுள்ள குப்பைகள் காற்றில் பறந்து சாலைகளில் சிதறி கிடக்கிறது. மேலும் அருகில் உள்ள வயல்களில் பரவி கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பல்வேறு தொற்று நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. சாலையோரத்தில் குப்பை கழிவுகளை கொட்டக்கூடாது என்று சம்பந்தப்பட்டவர்களுக்கு பொதுமக்கள் புகார் தெரிவித்தும் குப்பைகள் கொட்டுவது மட்டும் நிறுத்தப்படவில்லை. எனவே சாலையோரங்களில் குப்பைகள் கொட்டாமல் இருக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : East Coast ,Sinhalandi , ECR road, Thiruthuraipoondi,Garbage,Railway Bridge
× RELATED பயிற்சிக்கு வந்தபோது சில்மிஷத்தில்...