சென்னை: அதிமுக தேர்தல் அறிக்கைக்கு தடை விதிக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் சுப்ரமணியன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவுடன் புகார் மனு அளித்துள்ளார். குடும்பத்தில் ஒருவருக்கு வேலை என்று சாத்தியமில்லாத திட்டத்தை அதிமுக அறிவித்துள்ளதாக புகார் தெரிவித்துள்ளார்.