×

கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் மேலும் 25 மாணவிகளுக்கு கொரோனா தொற்று

தஞ்சாவூர் : தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்று கடந்த சில மாதங்களாக வெகுவாக குறைந்து இருந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது. குறிப்பாக பள்ளிகள், கல்லூரிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.

இதன்படி தஞ்சை மாவட்டத்தில் உள்ள 11 பள்ளிகள் மற்றும் 2 கல்லூரிகளை சேர்ந்த 119 மாணவர்கள், ஆசிரியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் மேலும் 25 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தஞ்சையில் ஏற்கனவே 143 பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிப்பு 168 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் தஞ்சையில் பள்ளி மாணவர்கள் இடையே கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது மாணவர்கள், பெற்றோர்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Cumangan , Thanjavur, Corona Virus, Students, Parents, Staffs
× RELATED கும்பகோணத்தில் வாக்காளர்களுக்கு ரூ.2000...